Last Updated : 25 Jul, 2018 07:47 AM

 

Published : 25 Jul 2018 07:47 AM
Last Updated : 25 Jul 2018 07:47 AM

கர்நாடகாவில் கன மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு 82 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

கர்நாடகாவில் கன மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து விநாடிக்கு 82 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த இரு மாதங்களாக தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்ததால் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகள் கடந்த வாரம் முழு கொள்ளளவை எட்டின.

இந்நிலையில் நேற்று குடகு மாவட்டத்தில் தலக்காவிரி, மடிக் கேரி, பாகமண்டலா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதேபோல மைசூரு, மண்டியா, பெங்களூரு ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ததால் கிருஷ்ணராஜ சாகர்,கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு நேற்று விநாடிக்கு 48 ஆயிரம் கன அடி நீர் வந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 51 ஆயிரம் கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டது.

இதேபோல மைசூரு மாவட்டத் தில் உள்ள கபினி அணைக்கு நேற்று விநாடிக்கு 29,200 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 31,200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிருஷ்ண ராஜ சாகர், கபினி ஆகிய அணை களில் இருந்து விநாடிக்கு 82 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மண்டியா, ராம்நகர் மாவட்டங் களில் காவிரி கரையோரம் வாழும் கிராம மக்கள் கடந்த 10 நாட் களுக்கும் மேலாக, பாதுகாப் பான இடங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய இரு அணைகளும் கடல் போல் காட்சியளிப்பதைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இத னால் இரவில் இரு அணைகளில் இருந்து வெளியேறும் நீரின் அழகை கண்டு ரசிக்க வண்ண, வண்ண மின்விளக்குகள் பொருத் தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x