Last Updated : 25 Jul, 2018 07:14 AM

 

Published : 25 Jul 2018 07:14 AM
Last Updated : 25 Jul 2018 07:14 AM

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தில் கும்பல் கொலை பிரிவு முதன்முறையாக சேர்ப்பு

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தில் (என்சிஆர்பி) கும்பல் கொலை பிரிவு முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் நடைபெறும் பல்வேறு குற்றங்கள் தொடர்பான பதிவு தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தில் ஆண்டுதோறும் பதிவு செய்யப்படுவது வழக்கம். இந்தப் பணியை மத்திய அரசின் என்சிஆர்பி சார்பில் புள்ளிவிவரங்கள் திரட்டி தொகுப்பாக வெளியிடப்படுகிறது.

என்சிஆர்பியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த தொகுப்பு பொதுமக்கள் பார்வைக்காகப் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் சிறப்பு உள்ளூர் சட்டம் (எஸ்எல்எல்) ஆகியவற்றின் கீழ் நடைபெறும் குற்றங்கள் இதில் பதிவு செய்யப்படுகிறது.

எனினும், சமீப ஆண்டுகளாக ‘பசு பாதுகாப்பு’ எனும் பெயரில் கும்பல்களால் அடித்துக் கொல்லப்படும் குற்றங்களின் பதிவு இந்த தொகுப்புகளில் இடம்பெறாமல் இருந்தது. ஐபிசி மற்றும் எஸ்எல்எல் என இரண்டு பிரிவுகளின் கீழும் அந்தக் குற்றங்கள் வராமல் இருந்ததே இதற்கு காரணம் ஆகும்.

இந்நிலையில், முதன்முறை யாக, என்சிஆர்பியின் புள்ளி விவரங்களில் கும்பல் கொலை பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. தற் போது அதன் சார்பில் தயாராகி வரும் 2017-ஆம் ஆண்டிற்கான தொகுப்பில் ‘கும்பலால் அடித்துக் கொலை’ (Lynchings) எனும் புதிய பிரிவில் இதுதொடர்பான குற்றங்கள் பதிவாகி வெளியாக வுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரம் கூறியதாவது:

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பலாக சேர்ந்து அடித்துக் கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதை பதிவு செய்ய சில வருடங்களுக்கு முன் கோரிய என்சிஆர்பிக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மீது புதிதாக சட்டம் கொண்டு வரவேண்டி எங்களிடம் குவியும் யோசனைகள் மீது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என அவர்கள் தெரிவித்தனர்.

2017-ஆம் ஆண்டுக்கான என்சிஆர்பியின் குற்றத்தொகுப்பு சுமார் நான்கு மாதங்களில் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x