Published : 22 Aug 2014 01:23 PM
Last Updated : 22 Aug 2014 01:23 PM

ஒடிசா கொடூரம்: தேநீரை தாமதமாக தந்த மனைவியை கொன்ற கணவர் கைது

தேநீர் கொண்டுவர மனைவி தாமதித்ததால், ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவரை, ஒடிசா போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து குஹாலிபால் காவல்துறை அதிகாரி கூறியது:

ஒடிசாவில் உள்ள குஹாலிபாலைச் சேர்ந்தவர் மஹாலியா நாயக். 56- வயதான இவர், கடந்த திங்கட்கிழமை காலை தனது மனைவி ஜனாவிடம் தேநீர் கொண்டுவரும்படி கேட்டுள்ளார்.

தேநீர் கொண்டுவருவதில் தாமதமானதால், மஹாலியாவுக்கும் ஜனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து உணவு சமைக்க போவதில்லை என்று ஜனா கூறியதால் இருவருக்கும் சண்டை வலுத்தது.

இது குறித்து கணவன்- மனைவி இருவருக்கு அன்று இரவு மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கணவர் மஹாலியா, தனது மனைவியை கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்கியதில், ஜனா உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து புதன்கிழமை அன்று தகவல் தெரிவிக்கப்பட்டதும், மஹாலியா நாயக் என்பவரை கைது செய்துள்ளோம். விசாரணயின்போது, மனைவியை ஆத்திரத்தில் கொன்றதாக நாயக் ஒப்புக்கொண்டதாக காவல்த்துறை அதிகாரி தசாரதி நாத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x