Published : 30 Jun 2018 08:19 AM
Last Updated : 30 Jun 2018 08:19 AM

நிலச்சரிவால் அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

காஷ்மீர் மாநிலம் அமர்நாத்தில் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான அமர்நாத் யாத்திரை 27-ம் தேதி தொடங்கியது.

கடந்த 2 நாட்களாக காஷ்மீரில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

பல்டால் பாதை வழியே அமர்நாத் செல்வதற்கான சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பஹல்காம் பகுதியிலும் கனமழை பெய்வதால், இந்தப் பாதை வழியிலும் யாத்திரை நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பஹல்காம் பாதையில் நேற்று 2,032 பேர் யாத்திரை புறப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x