Published : 24 May 2018 07:46 AM
Last Updated : 24 May 2018 07:46 AM
தூத்துக்குடி கலவரம் தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாட்கள் போராடி வந்த பொதுமக்கள் 100-வது நாளான மே 22 அன்று ஆட்சியர் அலுவலகத்துக்கு 144 தடையை மீறி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டையும், அது நடத்தப்பட்ட விதத்தையும் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கண்டித்தன. தேசிய அளவிலும் எதிர்ப்பு எழுந்தது. தேசிய அளவிலிப்பிரச்சினை எழுந்ததாலும் 13 பொதுமக்கள் உயிரிழந்ததாலும் இது குறித்த மத்திய அரசின் உள்துறையின் கவனத்துக்கு இப்பிரச்சினை கொண்டுச்செல்லப்பட்டது.
தூத்துக்குடியில் நடக்கும் சம்பவங்கள் பற்றி தமிழக அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அங்குள்ள நிலைமை பற்றி அறிக்கை அளிக்க மாநில அரசை மத்திய அரசு கேட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் டெல்லியில் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT