Published : 18 Jun 2018 09:16 AM
Last Updated : 18 Jun 2018 09:16 AM
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை மற்றும் வெள்ளத்துக்கு மேலும் 5 பேர் இறந்தனர். இதையடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் கரீம்கஞ்ச், கோலாகாட் உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த 4.5 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 673 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 1,512 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 481 நிவாரண முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவும் மருந்து உட்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிவாரணப் பணிகள் முடங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT