Published : 02 Jun 2018 08:34 AM
Last Updated : 02 Jun 2018 08:34 AM
பிலிப்பைன்ஸ் கடலில் குவாம் கடற்கரை பகுதியில் மலபார் கடற்படை போர் பயிற்சி வரும் 7-ம் தேதி தொடங்கி, 15-ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படையினர் கூட்டாக போர் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இந்த பயிற்சி கடலிலும் கரைப்பகுதியிலும் நடக்கும் என்றும் மூன்று நாடுகளிடையே ராணுவ உறவை பலப்படுத்தும் என்று அமெரிக்க கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியின்போது எதிரிகளை தாக்குவதில் நவீன போர் பயிற்சிகள், தற்காப்பு முறைகள், கடற்பகுதி ரோந்து, வீரர்களின் திறமை உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வரும் நிலையில், பசிபிக் கடல் பகுதியில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுவது முக்கியத்துவம் பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT