Published : 17 Jun 2018 10:13 AM
Last Updated : 17 Jun 2018 10:13 AM
திரிபுரா, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் பலத்த மழை மற்றும் வெள்ளத்துக்கு இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர்.
திரிபுரா, மணிப்பூர், அசாம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், திரிபுரா மாநிலத்தின் பல்வேறு கிராமங்களில் உள்ள 3,500-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் காரணமாக அங்கு சாலை, ரயில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உணவுப்பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்புப் பணிகளிலும் ஈடுபட முடியவில்லை. பலர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களும் கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், இந்த மழை மற்றும் வெள்ளத்துக்கு மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். அந்த மாநிலங்களில் ராணுவத்தினரும், அஸ்ஸாம் ரைபிள்ஸ் துணை ராணுவப் படையினரும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாநிலங்களில் மேலும் சில நாட்களுக்கு கன மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT