Published : 09 Jun 2018 08:21 AM
Last Updated : 09 Jun 2018 08:21 AM
காஷ்மீர் மாநிலத்தின் திரிகுடா மலை உச்சியில் அமைந்துள்ளது வைஷ்ணவ தேவி குகைக்கோயில். இக்கோயிலுக்கு 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி ஏராளமான யாத்ரீகர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது, கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் சிக்கிக் கொண்டனர். இதனைக் கண்ட சிஆர்பிஎப் வீரர் ஹர்வீந்தர் சிங், உடனடியாக அங்கு சென்று நிலச்சரிவில் சிக்கியவர்களைக் காப்பாற்றினார். அப்போது, மலையில் இருந்து உருண்டு வந்த பாறை எதிர்பாராதவிதமாக அவரது தலையில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஹர்வீந்தரின் தியாகத்தையும், துணிச்சலையும் போற்றும் வகையில், அவருக்கு நேற்று மத்திய அரசு ‘பிரதமர் பதக்கம்’ வழங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT