Published : 05 Jun 2018 08:55 AM
Last Updated : 05 Jun 2018 08:55 AM
மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கான பேறு கால விடுமுறையை 6 மாதத்தில் இருந்து 9 மாதங்களாக சமீபத்தில் உயர்த்தியது. இதுபோல ஆண் ஊழியர்களுக்கும் பேறு கால விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், அரசு அதிகாரிகளுடன் முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அரசு துறைகளில் பணியாற்றும் ஆண் ஊழியர்கள் அனைவருக்கும் பிரசவத்துக்கு பின் மனைவியையும் குழந்தையையும் கவனித்துக் கொள்ள வசதியாக 15 நாட்கள் பேறு கால விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT