Published : 05 Jun 2018 08:53 AM
Last Updated : 05 Jun 2018 08:53 AM
கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ள குமாரசாமியை தமிழக விவசாயிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகத்தை சேர்ந்த உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து தலைமையில் தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் பெங்களூருவில் நேற்று முதல்வர் குமாரசாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதுகுறித்து செல்லமுத்து கூறுகையில், “ஆணையம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் குமாரசாமிக்கு நீர் திறக்கும் அதிகாரம் உட்பட எந்த அதிகாரமும் இல்லை. எனவே அவரிடம் நாங்கள் எந்த கோரிக்கையையும் வலியுறுத்தவில்லை.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் காவிரி பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என கூறுவதை ஏற்க முடியாது. நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT