Published : 25 Jun 2018 08:00 AM
Last Updated : 25 Jun 2018 08:00 AM

தொழிலாளர்களின் பயத்தை போக்க மயானத்தில் தூங்கிய எம்எல்ஏ

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், பாலகொள்ளு தொகுதியின் தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ ராமா நாயுடு. இவரது தொகுதியில் நவீன மயானம் கட்டுவதற்கு அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கியும் பணிகள் மந்தமாக நடந்தன. இதை அறிந்த எம்எல்ஏ நேரில் சென்று கட்டிடத் தொழிலாளர்களிடம் விசாரித்தார். அப்போது அவர்கள், மயானத்தில் இரவில் பேய், பிசாசு நடமாட்டம் இருப்பதால் அச்சப்படுவதாகக் கூறினர். இதையடுத்து இரு தினங்களுக்கு முன்பு மயானத்திற்கு சென்ற ராமா நாயுடு, அன்று இரவு அங்கேயே சாப்பிட்டுவிட்டு பாயில் தனியாக படுத்து உறங்கினார். இதையடுத்து தங்களுக்கு பயம் நீங்கிவிட்டதாகவும் கட்டுமானப் பணியை விரைவாக முடித்துத் தருவதாகவும் கட்டிடத் தொழிலாளர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x