Published : 09 Jun 2018 04:28 PM
Last Updated : 09 Jun 2018 04:28 PM
இந்திய வானிலைமைய முன்னறிவிப்புக்கு இணங்க மும்பையை இன்று அதிகாலை முதல் கன மழை புரட்டிப் போட்டுள்ளது. பல பகுதிகளில் பெரிய அளவில் சாலைகளிலும் தெருக்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் புறநகர் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்திய வானிலை மையம் இன்று கன மழை முதல் மிக கனத்த மழை பெய்யும் என்று எச்சரித்திருந்தது, அதற்கேற்ப கொட்டித் தீர்த்தது மழை.
நள்ளிரவு கடந்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மிதமானது முதல் கன மழை பரவலாக பலபகுதிகளி கொட்டித்தீர்த்தது. இன்று காலை 8.30 மணி வரை நகரில் 37 மிமீ மாமழை பெய்துள்ளது. 12 மணி வரை 33.65 மிமீ மழை பதிவாகியிருந்தது.
சமூகவலைத்தளங்களில் மும்பை வாசிகள் தங்கள் பகுதி வெள்ளத்தினை புகைப்படங்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.’
மாதுங்கா-குர்லா ரயில் நிலையங்கள் இடையே இருப்புப் பாதையில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் ரயில்கள் தாமதமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
கத்கோபார், விக்ரோலி இடையே சுவர் ஒன்று பெயர்ந்து ரயில்வே பாலத்தில் விழுந்தது.
இந்த மழைக்கு உயிர்ப்பலி இது வரை இல்லாவிட்டாலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT