Published : 09 Jun 2018 10:17 AM
Last Updated : 09 Jun 2018 10:17 AM

பாஜக அரசுக்கு எதிராக மாவோயிஸ்ட்களை கருவியாக பயன்படுத்தும் கட்சிகள்: அருண் ஜேட்லி குற்றச்சாட்டு

பாஜக அரசுக்கு எதிராக மாவோயிஸ்ட்களை சில கட்சிகள் பயன்படுத்துகின்றன என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்த பாணியில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல மாவோயிஸ்ட்கள் சதி செய்வதாக புனே போலீஸார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், அருண் ஜேட்லி வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

மாவோயிஸ்ட்களின் நடவடிக்கைகள் அவர்கள் வழக்கமாக செயல்படும் இடங்களைத் தாண்டியும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இது அபாயகரமானது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக மாவோயிஸ்ட்களை சில கட்சிகள் தங்கள் கருவியாக பயன்படுத்தி வருகின்றன. இது துரதிர்ஷ்டவசமானது. புலியின் மீது சவாரி செய்பவர்கள்தான் முதலில் புலிக்கு பலியாவார்கள் என்பதை வரலாறு நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x