Published : 03 Jun 2018 08:30 AM
Last Updated : 03 Jun 2018 08:30 AM
பிரதமர் மோடி இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை நேற்று நிறைவு செய்தார். கடைசி நாளான நேற்று அவர் சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவை பார்வையிட்டார். யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற இந்த பூங்காவில் உள்ள ஒருவகை ஆர்கிட் மலருக்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டது.
முன்னதாக சிங்கப்பூரில் உள்ள பழமைவாய்ந்த மாரியம்மன் கோயிலில் மோடி வழிபட்டார். இந்திய முஸ்லிம்களால் கட்டப்பட்ட மசூதி, புத்த மடாலயத்துக்கும் அவர் சென்றார். சிங்கப்பூரின் சாங்கி கடற்படைத் தளத்தில் இந்திய கடற்படையின் சத்புரா போர்க்கப்பல் நங்கூரமிட்டுள்ளது. அந்த கடற்படைத் தளத்துக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி இந்திய கடற்படை அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.
மகாத்மா காந்தியின் அஸ்தி சிங்கப்பூரில் கரைக்கப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில் கிளிபர்ட் பியரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தை மோடி திறந்து வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT