Published : 29 Jun 2018 08:30 AM
Last Updated : 29 Jun 2018 08:30 AM
மேற்குவங்க மாநிலத்திலிருந்து காஷ்மீருக்கு சிறப்பு ரயிலில் சென்ற எல்லை பாதுகாப்புப் படையைச் (பிஎஸ்எப்) சேர்ந்த 9 வீரர்கள் நடுவழியில் காணாமல் போயினர்.
மேற்குவங்க மாநிலத்திலிருந்து காஷ்மீருக்கு 83 பிஎஸ்எப் வீரர்கள் ரயிலில் புறப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு உ.பி.யின் முகல்சாரி ரயில் நிலையத்துக்கு அருகே ரயில் சென்றபோது 9 வீரர்களைக் காணவில்லை. இதுகுறித்து பிஎஸ்எப் அதிகாரி முகல்சாரி ரயில்வே போலீஸில் புகார் செய்துள்ளார். அதில், “ரயிலில் வந்த 9 வீரர்கள் வர்த்மான் மற்றும் தன்பாத் ரயில் நிலையங்களுக்கிடையே காணாமல் போய் உள்ளனர்” என கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT