Published : 18 Jun 2018 04:42 PM
Last Updated : 18 Jun 2018 04:42 PM
உத்தரப் பிரதேசத்தில், தனது அண்டைவீட்டைச் சேர்ந்தவரால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை, கிண்டலுக்கு ஆளான பெண் மனநிலை பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து மதுரா காவல்நிலைய போலீஸார் தெரிவித்துள்ளதாவது:
தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் தந்தை அளித்துள்ள புகாரில் தனது மகள் தற்கொலை செய்துகொண்டதாகவும் அதற்குக் காரணமான தனது அண்டை வீட்டைச் சேர்ந்த பங்கஜ் என்பவரை கைது செய்யவேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார்.
அண்டை வீட்டைச் சேர்ந்த பங்கஜ் என்பவர் இவரது மகளை தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கோடுமை செய்துவந்தார். அதுமட்டுமின்றி பார்க்கும்போதெல்லாம் கிண்டல்செய்தும் வந்துள்ளார். இதனால் பங்கஜின் நீண்டகால துன்புறுத்தலைப் பொறுக்கமுடியாமல் தாய்மாமன் வீடு உள்ள எட்டாவாவுக்கு இவரது மகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் குற்றஞ்சாட்டப்பட்ட பங்கஜ் எட்டாவாவுக்குச் சென்று அப்பெண்ணைக் கடத்தியுள்ளார். அவரைப் பின்தொடர்ந்து போலீஸார் பங்கஜை கைது செய்தனர்.
இருப்பினும், சிறையிலிருந்து வெளியே வந்தபிறகும், அப்பெண்ணை துன்புறுத்துவதை நிறுத்தவில்லை. இதனால் அப்பெண் நவீத் நகரிலுள்ள அத்தை வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். நேற்றுமாலை அவர் அங்கு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
பெண் தற்கொலை செய்து கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்படும் அளவுக்கு மோசமான சூழ்நிலையை உருவாக்கிய இளைஞரை வலைவீசி தேடும் வேட்டையில் போலீஸார் இறங்கியுள்ளனர்.''
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT