Published : 09 Jun 2018 08:11 AM
Last Updated : 09 Jun 2018 08:11 AM
சத்தீஸ்கரில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்சல் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜரமோங்கியா வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பாக போலீஸாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், பைரம்ஹர் போலீஸாரும், மாவட்ட ஆயுதப்படை போலீஸாரும் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்கள், போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீஸாரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சண்டையில், மோதி பார்ஸா (28) என்ற நக்சல் கமாண்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்ற நக்சல்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் நக்சல்களை தேடும் பணியில் போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT