Published : 14 Jun 2018 08:46 AM
Last Updated : 14 Jun 2018 08:46 AM
கோவா மாநிலத்தில் உள்ள பிஸ்ரேலம் பகுதியில் போதைப் பொருட்கள் தயாரிப்பதாக வருவாய் உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அந்தப் பகுதியில் வருவாய் உளவுத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
அப்பகுதியில் உள்ள இரும்புத் தொழிற்சாலையில் சோதனை செய்தபோது, அங்கு கீட்டாமின் என்ற போதைப்பொருள் தயாரிக்கப்படு வருவது தெரியவந்தது. அங்கிருந்த 100 கிலோ கீட்டாமின் போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொழிற்சாலைக்கு சீலிட்ட அதிகாரிகள், அதன் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT