Published : 09 Jun 2018 02:57 PM
Last Updated : 09 Jun 2018 02:57 PM
டெல்லியில் போலீஸார் நடத்திய என் கவுன்டரில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
டெல்லியில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் நீண்டநாட்களாகத் தேடப்பட்டு வந்தனர். இவர்களின் தலைகளுக்கு வெகுமதியும் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் நால்வரும் இன்று தெற்கு டெல்லியின் சாதர்பூர் பகுதியில் டெல்லி காவல்நிலைய சிறப்பு செல் பிரிவு போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தின் போது மூன்று போலீஸாரும் படுகாயமடைந்துள்ளனர்.குற்றம்சாட்டப்பட்ட இவர்கள் அனைவரும் கொள்ளைக்கும்பலைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT