Published : 30 May 2018 08:12 AM
Last Updated : 30 May 2018 08:12 AM

மிசோரம் ஆளுநரானார் கும்மணம் ராஜசேகரன்

மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இம்மாநிலத்தின் 18-வது ஆளுநராக கும்மணம் ராஜசேகரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) நிர்பய் சர்மா மிசோரம் ஆளுநராக கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார். இவரது பதவிக் காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து அம்மாநிலத்தின்புதிய ஆளுநராக ராஜசேகரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பில் பணியாற்றிய இவர், கேரளாவைச் சேர்ந்த அடிப்படைவாத அமைப்பான இந்து அய்க்யவேதியின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். பின்னர், பாஜகவில் சேர்ந்த இவர் பல்வேறு போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மிசோரம் ஆளுநராக ராஜசேகரனை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x