Published : 24 May 2018 08:33 AM
Last Updated : 24 May 2018 08:33 AM

பாஜக எம்.பி வீடு குண்டு வைத்து நக்சல்கள் தகர்ப்பு

சத்தீஸ்கரில் பாஜக எம்.பி. விக்ரம் உஸெந்தியின் இல்லத்தை நக்சல் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் காங்கேர் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி.யாக இருப்பவர் விக்ரம் உஸெந்தி. இவருக்குச் சொந்தமான பண்ணை இல்லம் ஒன்று அங்குள்ள போந்த்னார் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், காங்கேர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதற்காக சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் நேற்று அங்கு செல்வதாக இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பாஜக எம்.பி. விக்ரம் உஸெந்தியின் பண்ணை இல்லத்தை நக்சல் அமைப்பினர் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x