Published : 01 Aug 2014 10:02 AM
Last Updated : 01 Aug 2014 10:02 AM

சசி தரூர் வெற்றியை எதிர்த்து வழக்கு

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் மக்களவைத் தேர்தலில் திருவனந்தபுரத்தில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து கேரள உயர் நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்ட பாஜக தலைவர் எஸ்.சுரேஷ் இந்த மனுவைத் தாக்கல் செய் துள்ளார். அதில், இறந்து போன சுனந்தா புஷ்கரின் சொத்து மதிப்பு விவரங்கள் பற்றி தன்னுடைய வேட்பு மனுவில் அவரது கணவரான சசி தரூர் தெரிவிக்கவில்லை. ஆகவே அவரது இந்த வெற்றி செல்லாததாகும். இவருக்கு அடுத்த இடத்தைப் பிடித்த பாஜ கவின் ஓ.ராஜகோபாலை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்று கோரப் பட்டிருந்தது. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி விசாரணையை 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x