Published : 24 May 2018 08:41 AM
Last Updated : 24 May 2018 08:41 AM

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மோடியின் புத்தகம்

பிரதமர் நரேந்திர மோடி 2001-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை குஜராத் முதல்வராக இருந்தார். அப்போது சிறந்த நிர்வாகம், முடிவெடுக்கும் திறன், நேர நிர்வாகம் போன்றவை குறித்து அவர் பேசிய பேச்சுகள் ‘சிந்தனை முகாம்’ என்ற பெயரில் குஜராத் அரசால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில ஐஏஎஸ் அதிகாரிகளும் நிர்வாகத் திறன் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் இந்த புத்தகங்களை ராஜஸ்தான் தலைமைச் செயலாளருக்கு குஜராத் தலைமைச் செயலாளர் அனுப்பி வைத்தார். பிரதமரின் பேச்சு அடங்கிய இந்தப் புத்தகங்கள் விரைவில் ராஜஸ்தான் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளன. இதை ராஜஸ்தான் மாநில பயிற்சி மற்றும் நிர்வாகத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x