Published : 07 May 2018 08:54 AM
Last Updated : 07 May 2018 08:54 AM

ஒடிசாவில் பாம்பு கடித்து 1,716 பேர் பலி

ஒடிசாவில் கடந்த 3 ஆண்டுகளில் பாம்பு கடித்து 1,716 பேர் இறந்துள்ளனர்.

இதுகுறித்து புவனேஸ்வரில் பேட்டியளித்த சிறப்பு நிவாரண துணை கமிஷனர் பி.ஆர். மொஹாபத்ரா கூறுகையில், ‘‘ஒடிசாவில் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு பேரிடர்களில் 4,689 பேர் இறந்துள்ளனர். இதில் 1,716 பேர் பாம்பு கடித்து இறந்துள்ளனர். இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் இது 37 சதவீதம் ஆகும். பாம்பு கடிப்பது மாநிலத்தின் குறிப்பிடத்தக்க பேரிடர் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நஷ்டஈடு என்றும் சட்டம் இயற்றியுள்ளது ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x