Published : 20 May 2018 08:55 AM
Last Updated : 20 May 2018 08:55 AM

வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளது என, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தொடர்பாக இந்திய வானிலை மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “மேற்கு மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அரபிக்கடல் பகுதியில் புயல் உருவாகியுள்ளது. தென் மாநில வளிமண்டலத்தில் காற்றின் சுழற்சியில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது.

வானிலை மாறுபாடுகளால் தற்போது பெய்து வரும் மழை தொடர்ந்து நீடிக்கும். வரும் 29-ம் தேதி கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்க வாய்ப்பு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை மிஸ் பண்ணாதீங்க:

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x