Published : 26 Apr 2018 08:44 AM
Last Updated : 26 Apr 2018 08:44 AM

ஆந்திராவில் 203 ‘அண்ணா’ கேன்டீன்கள்: சந்திரபாபு நாயுடு தகவல்

ஆந்திர மாநிலம் முழுவதும் 203 இடங்களில் விரைவில் ‘அண்ணா’ கேன்டீன்கள் அமைக்கப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அம்மா உணவகம் திட்டத்தை அமல்படுத்தினார். இதேபோன்ற திட்டத்தை மறைந்த முதல்வர் என்.டி.ஆர் பெயரில் ‘அண்ணா’ கேன்டீன்களை தொடங்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார். இத்திட்டம், சோதனை முயற்சியாக அமராவதியில் தொடங்கப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் அமல்படுத்த நேற்று அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் பேசிய சந்திரபாபு நாயுடு, ‘‘விரைவில் மாநிலம் முழுவதும் 203 இடங்களில் ‘அண்ணா’ கேன்டீன்கள் அமைக்கப்படும். தனியார் ஏஜென்சிகள் மூலம் இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும்’’ என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x