Published : 21 Apr 2018 08:25 AM
Last Updated : 21 Apr 2018 08:25 AM

எல்லையில் பாக். தாக்குதல்: ராணுவ தளபதிகள் மாநாட்டில் ஆலோசனை

மூத்த ராணுவ தளபதிகள் மாநாடு டெல்லியில் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இந்த 6 நாள் மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் பாதுகாப்பு, பயிற்சிகள் உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவது குறித்து மாநாட்டில் மூத்த ராணுவ அதிகாரிகள் நேற்று ஆலோசித்தனர்.

மேலும், எல்லையில் பாகிஸ்தான், சீனாவால் சந்திக்கும் பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. காஷ்மீரில் நிலவும் பதற்றம், தீவிரவாதத்தால் ஈர்க்கப்படும் இளைஞர்களை ஜனநாயக வழிக்கு திருப்புவது போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இத்தகவலை மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x