Published : 21 Apr 2018 08:20 AM
Last Updated : 21 Apr 2018 08:20 AM
மேற்கு வங்கத்தில் மே 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. மனு தாக்கல் கடந்த 9-ம் தேதியுடன் முடிந்தது. எதிர்க்கட்சியினர் மனு தாக்கல் செய்யவிடாமல் தடுக்கப்பட்டதாக பாஜக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புகார் தெரிவித்தன. இதையடுத்து, மனு தாக்கல் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. மாநில அரசும் திரிணாமுல் காங்கிரசும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து நீட்டிப்பு உத்தரவை மாநில தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் தேதியை மாற்றியமைக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT