Published : 12 May 2024 05:54 AM
Last Updated : 12 May 2024 05:54 AM

ஆந்திராவில் விபத்தால் சிக்கிய ரூ.7 கோடி போலீஸார் விசாரணை

காக்கிநாடா: ஆந்திர மாநிலத்தில் நேற்றோடு தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் கட்சியினர் வாக்காளர்களுக்கு ஆங்காங்கே தலா ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரைவீடு வீடாக சென்று பணம் வழங்குவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில், நேற்று கிழக்குகோதாவரி மாவட்டத்தில் அனந்தபல்லி எனும் இடத்தில் லாரி மீது தவிடு மூட்டைகளை ஏற்றி வந்த மினி லாரி மோதி கவிழ்ந்தது.

அப்போது தவிடு மூட்டைகளிலிருந்து கட்டுக் கட்டான பணம் கீழே விழுந்தது. மினி லாரி ஓட்டுனரும் காயம் அடைந்தார். போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் ரூ.7 கோடிஇருந்தது தெரியவந்தது. இதுபற்றி போலீஸார் விசாரிகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x