Published : 07 May 2024 07:34 AM
Last Updated : 07 May 2024 07:34 AM

2 பாக். தீவிரவாதிகள் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் பரிசு

ஸ்ரீநகர்: காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் ஷாசிதர் அருகே இந்திய விமான படைக்கு (ஐஏஎப்) சொந்தமான வாகனத்தின் மீது கடந்த சனிக்கிழமை தீவிரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர். இதில் ஐஏஎப் அதிகாரி விக்கி பஹேடு உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாதுகாப்புப் படையினர், அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, இந்த தாக்கு தலில் தொடர்புடையதாக சந்தே கிக்கப்படும் 2 பேரின் மாதிரி புகைப்படங்களை பாதுகாப்புப் படையினர் வெளியிட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x