Published : 05 May 2024 08:06 AM
Last Updated : 05 May 2024 08:06 AM

துபாயிலிருந்து 25 கிலோ தங்கம் கடத்தல்: ஆப்கன் துணை தூதரக பெண் அதிகாரி ராஜினாமா

மும்பை: மும்பையில் உள்ள ஆப்கானிஸ்தானின் துணைத் தூதரகத்தின் முதல் பெண் அதிகாரியாக ஜாகியா வார்தக் (58) பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி துபாயிலிருந்து விமானத்தில் மும்பை சர்வதேச விமான நிலையம் வந்துள்ளார். அவர் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வருவாய் புலனாய்வு அதிகாரிகள் (டிஆர்ஐ) அவருடைய பைகளை சோதனையிட்டனர். அதில் ஒன்றும் சிக்கவில்லை.

இதையடுத்து, அவரை பரிசோதனை செய்தபோது உடைக்குள், ரூ.18.6 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. சட்ட ரீதியிலான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர் மீது தங்கம் கடத்த முயன்றதாக வழக்கு பதிவு செய்தனர்.

எனினும், அவரது பதவிக்கான சட்ட பாதுகாப்பு காரணமாக கைது செய்யப்படவில்லை. தங்க கடத்தல் தொடர்பாக நோட்டீஸ் வழங்கி அவரை அனுப்பிவிட்டனர்.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்த நிலையில், ஜாகியா வார்தக் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில், “கடந்த ஓராண்டில் என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் பலர் விமர்சனங்களை முன்வைத்ததுடன் அவதூறு கருத்துகளையும் தெரிவித்தனர். திட்டமிட்ட இந்த தாக்குதல்கள், என்னுடைய செயல்திறனை கடுமையாக பாதித்துள்ளது. எனவே, நான் பதவி விலக வேண்டியகட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x