Published : 26 Apr 2024 08:26 AM
Last Updated : 26 Apr 2024 08:26 AM

டெல்லியில் பீர் பதுக்கல் அதிகரிப்பு

கோப்புப்படம்

கொளுத்தும் வெயிலுக்கு இடையில் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பீர் விற்பனையும் களைகட்டியுள்ளது. அதேபோன்று, பீரை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, டெல்லியில் முறைகேடான பீர் விற்பனையை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். பதுக்கி வைக்கப்பட்டுள்ள ஏராளமான பீர் வகைகளை பறிமுதலும் செய்து வருகின்றனர். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டின் முதல் காலாண்டில் (ஜன-மார்ச்) பறிமுதல் செய்யப்பட்ட பீர் பாட்டில்களின் எண்ணிக்கை இருமடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.

அதன்படி, கடந்தாண்டு 2,117 பீர் பாட்டில்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு அந்த எண்ணிக்கை 5,965-ஐ தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் 1,23,479 பீர் பாட்டில்கள் பிடிபட்டதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், “ தேர்தலை முன்னிட்டு பறக்கும்படை சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத மது விற்பனையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் இதுவரையில் கள்ள சந்தையில் மது விற்பனை செய்தது தொடர்பாக 1,382 வழக்குகள் பதியப்பட்டு அதில் 1,363 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 1,400 பேர் கைதாகி உள்ளனர்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x