Last Updated : 08 Apr, 2018 09:03 AM

 

Published : 08 Apr 2018 09:03 AM
Last Updated : 08 Apr 2018 09:03 AM

டெல்லியில் 29-ம் தேதி காங்கிரஸ் பேரணி

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

போலி வாக்குறுதிகளைக் கொடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவிக்கு வந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் அந்த அரசு எதையும் செய்யவில்லை. பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல நல்ல நாள் வரவில்லை.

மத்திய அரசைக் கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஏப்ரல் 29-ம் தேதி கண்டனப் பேரணியை காங்கிரஸ் நடத்தவுள்ளது. இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x