Published : 08 Apr 2018 09:03 AM
Last Updated : 08 Apr 2018 09:03 AM
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:
போலி வாக்குறுதிகளைக் கொடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவிக்கு வந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் அந்த அரசு எதையும் செய்யவில்லை. பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல நல்ல நாள் வரவில்லை.
மத்திய அரசைக் கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஏப்ரல் 29-ம் தேதி கண்டனப் பேரணியை காங்கிரஸ் நடத்தவுள்ளது. இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT