Published : 10 Feb 2018 07:35 AM
Last Updated : 10 Feb 2018 07:35 AM

மானசரோவர் யாத்திரை நாதுலா பாதையை திறந்தது சீனா

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நாதுலா கணவாய் பாதையை சீனா திறந்து விட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவு இணை அமைச்சர் வி.கே. சிங் நேற்று மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதில்: டோக்லாம் பிரச்சினை காரணமாக நாதுலா பாதை வழியாக கடந்த ஆண்டு கைலாஷ் யாத்திரை மேற்கொள்ளப்படவில்லை. இதையடுத்து சீன அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து நாதுலா பாதையை சீனா தற்போது திறந்துள்ளது என்றார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x