Published : 10 Feb 2018 07:08 AM
Last Updated : 10 Feb 2018 07:08 AM

பிரதமரின் ஆராய்ச்சி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: பிஹெச்டி மாணவர்கள் மாதம் ரூ.80 ஆயிரம் பெறுவர்

நம் நாட்டில் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில், ‘பிரமதரின் ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, ஐஐடி, என்ஐடி போன்ற முன்னணிக் கல்வி நிறுவனங்களில் பி.டெக். படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களில் சுமார் 1000 பேர் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் நேரடியாக ஆராய்ச்சிப் படிப்பை (பிஹெச்டி) மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், சிறந்த பிஹெச்டி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாதந்தோறும் ரூ.70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை உதவித்தொகையாக வழங்கப்படும். 2018-19-ம் நிதியாண்டில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x