Published : 06 Jan 2024 06:23 AM
Last Updated : 06 Jan 2024 06:23 AM

24 மணி நேரத்தில் 761 பேருக்கு கரோனா

புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 761 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து தற்போது 4,334 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 24 மணி நேரத்தில் 4 பேர் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். தவிர கரோனா திரிபான ஜேஎன்.1 தொற்றுக்கு இதுவரை 541 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்தியாவில் 2020 முதல் இதுவரை தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 78,885 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220.67 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x