Published : 05 Jan 2018 10:15 AM
Last Updated : 05 Jan 2018 10:15 AM
ரயில்வே துறை தொடர்பாக ‘சுற்றுலா மேம்பாடு மற்றும் புனித யாத்திரை வழித்தடம்’ என்ற தலைப்பில் சுதிப் பந்தோபாத்யாய தலைமையிலான நிலைக்குழு மக்களவையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை புகைப்படங்களுடன் மிகவும் சுவாரசியமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறும்போது, “இந்த அறிக்கை சிறு நூலாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 4 புகைப்படங்களும் அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.
இதையடுத்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமார் எழுந்து, “அழகிய சிறு நூலாக இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. இது புதுமையான முயற்சி. இதை அவை பாராட்ட வேண்டும்” என்றார். இதையடுத்து அவை உறுப்பினர்கள் மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT