Published : 11 Jan 2018 11:24 AM
Last Updated : 11 Jan 2018 11:24 AM
இந்த ஆண்டு சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத் தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ என அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்குகிறது.
பத்தாம் வகுப்பிற்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடைபெறும் நிலையில், நாடுமுழுவதும், 16,38,552 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள்,முதல் தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 4ம் தேதி நிறைவு பெறுகிறது. முதல் தேர்வாக தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத் தேர்வு நடைபெறுகிறது.
பிளஸ் 2 பொதுதேர்வில், நாடுமுழுவதும் இருந்து 11, 86,144 மாணவர்கள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு, மார்ச் 5ம் தேதி முதல் தேர்வாக ஆங்கிலம் நடைபெறுகிறது. ஏப்ரல் 12ம் தேதியுடன் தேர்வு நிறைவு பெறுகிறது. இந்த மாணவர்களுக்காக செய்முறைத் தேர்வுகள் ஜனவரி இரண்டாம் வாரத்திற்குள் நிறைவு பெறும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT