Published : 19 Dec 2023 06:03 AM
Last Updated : 19 Dec 2023 06:03 AM

கியான்வாபி மசூதியில் கள ஆய்வு: வாரணாசி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது ஏஎஸ்ஐ

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. கோயிலின் ஒரு பகுதியைஇடித்து முகலாய மன்னர் அவுரங்கசீப், மசூதி கட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில் கள ஆய்வு நடத்த வாராணசி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆய்வு நடத்தஅனுமதி வழங்கியது. ஆனால், உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவைவிசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஆய்வு நடத்த தடை விதிக்கமுடியாது என கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி தெரிவித்தது. அதே நேரம், மசூதியை ஆக்கிரமிக்கக் கூடாது என்று உத்தரவிட்டது இதையடுத்து இந்திய தொல்லியல் துறை கடந்த ஆகஸ்ட்மாதம் ஆய்வை தொடங்கியது.

பின்னர் ஆய்வறிக்கையை தாக்கல் செய்வதற்கு 6 முறை காலநீட்டிப்பு கோரியது. இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை நேற்று தனது ஆய்வறிக்கையை வாராணசி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மூடி முத்திரையிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படுமா அல்லது மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர்களுக்கு வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x