Published : 08 Jan 2018 03:06 PM
Last Updated : 08 Jan 2018 03:06 PM
கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையின் மேலாண்மைப் பிரிவில் திங்கட்கிழமை காலையில் தீ விபத்து ஏற்பட்டது.
முதல்வர் ஆதித்யநாத்தின் சொந்த ஊரும் அவரது மக்களவை தொகுதியுமான கோரக்பூரில் அரசுக்கு சொந்தமான பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது.
இது குறித்து வெளியான தகவல்களின்படி, முதல்வரின் அலுவலக அறையும் மருத்துவமனை அறை ஒன்றும் தீக்கங்குகளால் சூழப்பட்டுள்ளன.
அங்கிருந்த நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். காவல்துறை அதிகாரிகளும் மூத்த அலுவலர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீயை அணைக்க 7 வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
தீ விபத்தால் மருத்துவமனையில் இருந்த ஏராளமான கோப்புகள் சேதமடைந்துள்ளன. முன்னதாக இதே மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த ஆண்டு 30 குழந்தைகள் உயிரிழந்தனர்.
பெரும்பாலான குழந்தைகளின் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையே முக்கிய காரணம் எனவும், ஒப்பந்த நிறுவனத்துக்கு பாக்கி வைத்ததால் அந்த நிறுவனம் ஆக்ஸிஜன் சிலிண்டர் சப்ளை செய்வதை நிறுத்தியதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் கோரக்பூர் மருத்துவமனை பலத்த சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT