Published : 08 Jan 2018 12:18 PM
Last Updated : 08 Jan 2018 12:18 PM
மும்பையில் உள்ள அமர்வு நீதிமன்ற கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் திங்கட்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட சேத விபரம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதுகுறித்துப் பேசிய மும்பை மாநகராட்சி பேரிடர் மேலாண்மைப் பிரிவு அதிகாரி, ''தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு இன்று காலை 7.14 மணிக்கு அழைப்பு வந்தது. தெற்கு மும்பையில் உள்ள மும்பை பல்கலைக்கழக வளாகத்தின் அருகே அமைந்துள்ளது அமர்வுகள் நீதிமன்றம். அங்கே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புத்துறையினர் விரைந்தனர். தீயை அணைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்த விசாரணை விரைவில் தொடங்கப்படும்'' என்று தெரிவித்தார்.
கடந்த 20 நாட்களில் மும்பையில் நடைபெறும் 5-வது தீ விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT