Published : 05 Jan 2018 10:06 AM
Last Updated : 05 Jan 2018 10:06 AM

மும்பையில் தீ விபத்தில் நான்கு பேர் பலி

மும்பை கிழக்கு அந்தேரி, தாவூதி போரா காலனியில் உள்ள 4 மாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென பரவியதில் 3-வது தளத்தில் வசித்த குடும்பத்தினர் தாவூது அலி கபாசி (80), தஸ்லீம் (42), சகினா (14), மோசின் (10) ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அண்டை வீடுகளில் 5 பேர் காயமடைந்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை முற்றிலும் அணைத்தனர். மின் கசிவே தீவிபத்துக்கு காரணம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.-ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x