Published : 31 Jan 2018 10:09 AM
Last Updated : 31 Jan 2018 10:09 AM
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 16 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நபரை குஜராத் மாநில போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் கோத்ராவைச் சேர்ந்த யாகுப் படாலியா (63) ஆவார். இவர் அகமதாபாத் பகுதியில் இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற அகமதாபாதின் பி டிவிஷன் போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீவைக்கப்பட்டது. இதில் 59 கர சேவகர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த ரயில் எரிப்பு வழக்கில் யாகுப் படாலியாவும் சம்பந்தப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் 2002-ம் ஆண்டு செப்டம்பரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் போலீஸார் கை யில் சிக்காமல் பல ஆண்டுகளாக தலைமறைவாக சுற்றி வந்தார். இந்த நிலையில்தான் 16 ஆண்டுகள் கழித்து தற்போது கைதாகியுள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
கோத்ரா ரயில் எரிப்பு வழக் கில் மொத்தம் 31 பேருக்கு தண்டனை கிடைத்தது. 63 பேர் விடுதலை செய்யப்பட்டனர். விசாரணை நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இதில் 11 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குஜராத் உயர் நீதிமன்றம் குறைத்தது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT