Published : 12 Jul 2014 03:33 PM
Last Updated : 12 Jul 2014 03:33 PM
ஜம்மு-காஷ்மீரில், இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
இன்று காலை 11 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர், ஜம்மு-காஷ்மீரின் ஆர்னியா பிரிவில், இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
தானியங்கி துப்பாக்கிகளை பயன்படுத்தியும் சிறிய அளவிளான கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லைப்பகுதியில், போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள நிலையில், பாகிஸ்தான் தரபபில் இதுபோன்ற தொடர்த் தாக்குதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT