Published : 10 Jan 2018 12:32 PM
Last Updated : 10 Jan 2018 12:32 PM

பிஹாரில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமில் கூட்ட நெரிசல்: ஒருவர் பலி

பிஹார் மாநிலத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாமில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் அதில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். ஐந்து பேர் காயமடைந்தனர்.

பிஹார் மாநிலம் ரோஹட்டாஸ் மாவட்டத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் கடந்த 5 நாட்களாக நடந்து வருகிறது. இதற்காக மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதலே ஏராளமான இளைஞர்கள் ஆள் சேர்ப்பு முகாம் நடந்த மைதானத்தில் திரண்டு இருந்தனர். இன்று காலை அவர்களை வரிசையில் நிற்கும்படி, ராணுவ அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அப்போது இளைஞர்கள் ஒருவரையொருவர் முந்திச்செல்ல முற்பட்டனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அவர்களை ஒழுங்குபடுத்த போலீஸார் முயன்றனர். ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால், போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் கூட்ட நெரிசல் அதிகமாக அதில் பலர் சிக்கிக் கொண்டனர். ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x