Published : 08 Jan 2018 09:34 AM
Last Updated : 08 Jan 2018 09:34 AM

காஷ்மீரில் 14 ஆயிரம் பதுங்குகுழிகள்

காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி சிறிய ரக பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், எல்லை கிராமப்பகுதிகளில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு சமீபத்தில் 14,460 பதுங்குகுழிகள் அமைக்க ஒப்புதல் அளித்தது. பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியையொட்டி 7,298 பதுங்குகுழிகள், ஜம்மு, கதுவா, சம்பா மாவட்டங்களில் சர்வதேச எல்லைப் பகுதியையொட்டி 7,162 பதுங்குகுழிகள் அமைக்கப்படும். ரூ.415.73 கோடி செலவில் இவை அமைக்கப்படும் என்று ஜம்முவில் அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x