Published : 10 Oct 2023 10:33 AM
Last Updated : 10 Oct 2023 10:33 AM

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர்

சோபியான்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சோபியான் மாவட்டத்தின் அல்ஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக இன்று காலை கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் பெயர்கள் மோரிஃபட் பக்பூல், ஜாசிம் ஃபரூக் என்றும் இருவரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ள காவல்துறை, இருவரில் ஒருவரான ஜாசிம் ஃபரூக், காஷ்மீர் பண்டிட் சஞ்சய் ஷர்மாவை கொலை செய்த பயங்கரவாதி என்றும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x