Published : 23 Dec 2017 02:54 PM
Last Updated : 23 Dec 2017 02:54 PM

தேர்தல் விதிமீறல் புகார்: பாஜக எம்.பி.க்கு ஒரு மாதம் சிறை தண்டனை

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட புகாரில், பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பாலுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் தோமரியாகஞ்ச் தொகுதி பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன், காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு கட்சி மாறினார். பின்னர் தோமரியாகஞ்ச் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு பாஜக சார்பில் எம்.பியானார்.

அந்த தேர்தலின்போது, பன்ஸியில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஜெகாதம்பிகா பால் ஆதரவு திரட்டினார். அப்போது அந்த இடத்திற்கு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே செல்ல வாகனங்களுக்கு அனுமதி வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால் ஜெதாம்பிகா பாலின் வாகனம் விதிமுறையை மீறி உள்ளே சென்றது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் ஜெகதாம்பிகா பால் மீது அப்போது, வழக்குப் பதிவு செய்யப்ட்டது. இந்த வழக்கை விசாரித்த சித்தார்த்நகர் நீதிமன்றம் நேற்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கியது. தேர்தல் விதிமீறிலில் ஈடுபட்டதற்காக ஜெகதாம்பிகா பாலுக்கு, ஒரு மாத சிறை தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்தது. எனினும் இந்த வழக்கில் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x