Published : 26 Sep 2023 07:53 AM
Last Updated : 26 Sep 2023 07:53 AM

கேரள மாநிலத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

கோழிக்கோடு: கேரள மாநிலம் கரிப்பூரில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு சுங்கத் துறையினர் நடத்திய சோதனையில் தங்கம் கடத்தி வந்த 6 பயணிகள் சிக்கினர்.

ரியாத்தில் இருந்து வந்த முகம்மது பஷீர், துபாயில் இருந்து வந்த முகம்மது மிட்லஜ்,தோகாவில் இருந்து வந்த ஸ்ரீ லிங்கேஷ், அஜீஸ் ஆகியோரிடம் இருந்து 970 கிராம் தங்கப் பசை பறிமுதல் செய்யப்பட்டது.

இது தவிர மேலும் 2 பயணிகளிடம் இருந்து அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். மொத்தம் 5.4 கிலோ எடை கொண்ட இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.3 கோடி என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x